Featured

Featured posts

கபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்

கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல் வரிகளுக்கான வீடியோக்கள் வெளியிட்ட நாளில் இருந்தே வைரலில் இருக்கின்றன. சராசரியாக யூடியூப் வீடியோக்கள் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு ரூ.20,100/- ஈட்டும். ஆனால் இது சாதாரண வீடியோக்களுக்கு , திரைப்பட டீசர்கள் இதை விட அதிகமாக வருமானம் ஈட்டும். எப்படி என்றால் வீடியோவுக்கு முன் வரும் விளம்பரம் தான். விவரம் : http://youtubemoney.co/ சரி கபாலி படத்தின் வீடியோக்கள் சாதாரண வீடியோ என்ற ரீதியில் எவ்வளவு வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது என பார்ப்போம்.

இஞ்சியினால் பெரும் நன்மைகள்

இஞ்சியை பற்றிய சில குறிப்புகள்; # இஞ்சி பூ பூக்கும் தாவர வகையை சேர்ந்தது,இஞ்சி நிறைய மருத்துவ குணங்கள் உடைய ஒரு உணவுப் பொருள். # இஞ்சியை பல கோணங்களில் பொடி,எண்ணெய்,சாறு,சுக்கு,இஞ்சி போன்ற வடிவில் உபயோகித்து வருகிறோம். # இதில் உள்ள  ஜிஞ்சரால் இஞ்சிக்கு நறுமணத்தையும் ,சுவையையும் தருகிறது. # இஞ்சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இஞ்சியின் பயன்கள்  # இஞ்சிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு.இஞ்சி ஜீரண கோளாறுகளை நீக்கி,ஜீரண உறுப்புகளை உறுதியாக்கி,செரிமானத்திற்கு உதவி புரிகிறது. # மேலும் சளி,காய்ச்சல்,வாந்தி போன்றவற்றிற்கு மருந்தாகிறது. # கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி,குடல் உபாதைகள்,புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாந்தி,போன்றவற்றிலிருந்து இஞ்சி தடுக்கிறது. # தினமும் காலையில் இஞ்சி சாருடன் தேன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. # இஞ்சியை பற்றிய ஒரு ஆய்வில் இஞ்சி தினமும் 2 கிராம் எடுத்துகொண்டால்,படிப்படியாக உடல்வலி குறையும் என்கிறார்கள்.இஞ்சி உடல் வலிக்கு மட்டும் உடனடி ... Read more

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக் காரணம் என்னவாக இருக்கும் பார்ப்போமா ? இரத்த சோகை,சரியாக உணவு உட்கொள்ளாதிருத்தல்,ஊட்டச்சத்து குறைபாடு,ஹேர் கலரிங்,ஷாம்பூ மாற்றி மாற்றி உபயோகித்தல்,தலைக்கு எண்ணெய் தடவாமலிருப்பது,தைராய்டு,புரோட்டீன் குறைபாடு,மெனோபாஸ்,குறிப்பிட்ட மருந்து வகைகள்,சுற்றுப்புற சூழல்,இன்னும் பல காரணங்கள் உள்ளன. முடி உதிர்வதற்க்கான தீர்வுகள்; கற்றாழை கற்றாழை முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு , தேவையான ஊட்டச்சத்தையும் முடிக்கு அளிக்கிறது.கற்றாழையில் உள்ள என்சைமேஸ் மற்றும் ஆல்கலின் முடி வளர ஊக்கமளிக்கிறது. *கற்றாழையின் சாறு மற்றும்ஜெல் இரண்டுமே தலைக்கு குளிர்ச்சியை தருகிறது.பொடுகு,தலையில் கட்டி,புண்,எரிச்சல்,போன்றவற்றை நீக்கி முடிக்கு ஊட்டமளித்து முடிவளரச்செய்கிறது. *கற்றாழை சாற்றை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து,சில மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரம் மூன்று முறை குளித்தால் முடி உதிர்வது குறையும். *நன்றாக முடி வளர கற்றாழை சாற்றை ஒரு ... Read more

குழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்

தானிய சூப் மிகவும் ருசியான சத்துள்ள சூப்,இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. *குழந்தைகள் மட்டுமல்லாமல்,அனைவரும் குடிக்கலாம்.இது குடிப்பதன் மூலம் நன்றாக பசி எடுக்க தூண்டும்.சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். *புரோட்டின் அதிகம் கொண்டுள்ள சூப். தேவையான பொருட்கள்; இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி முளைகட்டிய தானியங்கள் கலவை (அல்லது)ஏதாவது ஒரு தானியம் -1 கப் பீன்ஸ்,உருளைக் கிழங்கு,கேரட் -1/4 கப் நெய்-2 தேக்கரண்டி கொத்தமல்லி-சிறிதளவு வெங்காயம்-1/4 கப் லவங்கம்-4 உப்பு-தேவையான அளவு நீர் -3 டம்ளர் தயாரிக்கும் நேரம்;25நிமிடம் செய்முறை; *ஒரு குக்கரில் நெய் ஊற்றி ,நெய் உருகியவுடன் லவங்கம் மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும். *வெங்காயம் சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்களை கொட்டி இரண்டு,மூன்று முறை கிளற வேண்டும். *பின் முளைகட்டிய தானியத்தை சேர்த்து ஒரு முறை கிளறி,தண்ணீர் ஊற்ற வேண்டும். *தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும். *4 ... Read more

அடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் – நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

கனிந்த பழம் என்று ஆசையோடு விளிக்கப்பட்ட விஜயகாந்த் அவர் நிற்க்கும் தொகுதியில் வெற்றி பெற மாட்டார் என சொல்கிறார்கள் நியூஸ்7 மற்றும் தினமலர். அறிவியல் பூர்வமானதாக கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி அநியாயத்திற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ற பெயரில் சும்மா திரிப்பதை போலத்தான் இதைப் பார்க்கையில் தோன்றுகிறது. மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வி அடையும் வாய்ப்புள் ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் விஜயகாந்த் போட்டியிடுகிறார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுகவுக்கு 22.5 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுகவுக்கு 38.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக – ம.ந.கூட்டணிக்கு 26.6 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. பாமக 5.5 சதவீத ... Read more

ஸ்டாலின் முதல்வராவது எப்போது ? – கருணாநிதி விளக்கம்.

தமக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தம்முடைய முதுமையை சுட்டிக் காட்டி கருணாநிதி பேசி வருகிறார். தாம் 103 வயது வரை வாழ்ந்தாலும் தமிழக மக்களுக்காக உழைப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியலில் பணியாற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன். உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை என உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிலையில் என்.டி.டி.விக்கு கருணாநிதி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் திமுக ஆட்சி அமைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர் இளைஞர்களுக்கு வழிவிடுவீர்களா? குறிப்பாக உங்க கட்சியில் மு.க. ... Read more

என்னை வாக்களிக்க வையுங்கள்

தேர்வுக்கு தயாராகும் மாணவன் கூட அவ்வப்போது புத்தகத்தை புரட்டி பார்ப்பதுண்டு. ஆனால் இந்த அரசியல்வாதிகள் எப்படி தான் மனசாட்சியே இல்லாமல் ஐந்தாண்டு காலம் தங்களின் தீவிர பணிகளில் (யார் யார் என்ன பணி செய்தனர் என்பதை உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டுமா என்ன) கவனம் செலுத்தி விட்டு, இன்று எங்கு பார்த்தாலும் இதை செய்கிறோம் அதை செய்கிறோம், உடனே மூடுகிறோம்.. கொஞ்சம் கொஞ்சமாக மூடுகிறோம்.. இலவசமாக கொடுக்கிறோம், விலையில்லாமல் கொடுக்கிறோம் என வாக்குகள் பெற உறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். படித்து முடித்து விட்டு ஒரு பத்தாயிரம் ரூபாய் வேலைக்கு போவதற்குள் எதனை இடர்களை நாம் கடக்க வேண்டி இருக்கிறது.. நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகட்கு அப்படி இப்படி பதில் சொல்லி வேலை கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அத்தனைக்கும் சம்பளம் எதோ பத்தாயிரம் தான், ஆனால் இஷ்டத்திற்கும் எதை எதையோ சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெற்று இவர்கள் கோடிகளில் ... Read more

அய்யாத்துரை மேலேயே கேஸா?

திருச்செந்தூர்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமார் கடந்த 7ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் விலக்கில் வந்து கொண்டிருந்தபோது அவரது காரை பறக்கும்படை தாசில்தார் வள்ளிக்கண்ணு தலைமையிலான அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 9 லட்சம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால், அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்செந்தூர் சார்நிலை கருவூலத்தில் சேர்த்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 9 லட்சத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் ஆவணத்துடன் வந்து பணத்தை பெற்றுச் செல்வதாக சரத்குமார் கூறிச்சென்றார். 3 நாட்கள் கடந்த பின்னும் அவர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்களின்றி அளவுக்கு அதிகமாக காரில் சரத்குமார் பணம் கொண்டு வந்ததாக பறக்கும் படை அதிகாரி வள்ளிக்கண்ணு ... Read more

கோடையில் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

கோடையில் கவனத்துடன் சருமத்தை பராமரித்தாலே போதும் அழகான சருமத்தை பெறலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நிறத்தை மெருகேற்ற இயற்கை முறை பெரிதும் உதவியாக இருக்கும். சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால் சருமம் வறண்டும்,முகத்தில் சுருக்கங்களும் காணப்படும்.உங்களின் சருமம் எண்ணெய் பசையுள்ளதாக இருந்தால்,எண்ணெய் பசையற்ற மாயிஸ்ச்சரைசர் பயன்படுத்துங்கள்.மேலும் மாயிஸ்ச்சரைசர் வைட்டமின் E உள்ளதாகவும்,இயற்கை எண்ணைகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும்,இது நிறத்தை அழகாகவும் நிறத்தை வெண்மையுடனும் தோன்ற செய்யும். நீர்ச்சத்துக்கள் குறிப்பிட்ட காய்கறி,மற்றும் பழங்கள் உங்கள் சருமத்தில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.காரம் மற்றும் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான நீர் நிறைந்த காய்கறிகள் எடுத்துக்காட்டாக தர்பூசணி,ஆரஞ்சு,வெள்ளரிக்காய்,வெங்காயம்,கீரை வகைகள்,இவையனைத்தும் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன் சருமம் வறண்டு போகாமலும் பாதுகாக்கிறது. வீட்டிலிருந்தபடியே அழகான சருமம் பெறலாம் *வெள்ளரிக்காய் இயற்கையாகவே பிளீச்சிங் தன்மையை கொண்டது,வெள்ளரி சாறு சருமத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால்,சருமம் மென்மையாக ... Read more

திமுகவுக்கு ஓட்டு போட்டால் வேட்டு உங்கள் நலனுக்கு – ஜெயலலிதா பேச்சு

திமுகவினருக்கு அளிக்கும் ஓட்டு உங்கள் நலனுக்கும் வைக்கு வேட்டு என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்ந்து விட்டதாக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள் என்று கூறினார். பெருந்துறையில் இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேசியதாவது: ->தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன் ->திமுக ஆட்சியில் ஒவ்வொரு தொழிலும் நசிந்து போனது ->சலவை, சாயத்தொழிற்சாலைகள் மூடப்படுவதை தடுக்க அதிமுக ஆட்சிகாலத்தில் நடவடிக்கை ->சாய கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது ->பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி அளிக்கப்பட்டது ->விலைவாசி ஏற்றத்திற்கு அதிமுக ஆட்சியில் அதிகரித்து விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் ->உர விலையை ஏற்றியது திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்தான் ->அதிமுக ... Read more