வேண்டாம் விட்டு விடுங்கள்..

0
20
ஆம்..
நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் இருக்குமேயானால்,
வேண்டாம் விட்டு விடுங்கள் என்பது தான் சிறந்த பதிலாக இருக்கக் கூடும்.

பிறகு,
உண்ணாவிரதம் என்றால் என்ன?
என்ற கேள்விக்கு தினமும் யாராவது செயல் விளக்கம் கொடுக்க முற்படுகிறார்கள்.
சிலர் கொடுத்த விளக்கம் புரியவில்லையா என்பதாய் அரசை சாடி விட்டு மீண்டும் விளக்கியே தீருவேன் என்று அடம பிடிக்கின்றனர்.

ஆமாம்,
கடந்த சில வாரங்களாக நடந்த இந்த அறப்போரால் நாட்டுக்கு நடந்த நன்மை தான் என்ன?
உண்மையாகவே ஊழலுக்கு எதிராக ஏதேனும் நடந்து விட்டதா?
கருப்பு பணத்தின் ஒரு சிறு பகுதியாவது திரும்ப பெறப பட்டதா?
சரி அதை விடுங்கள்.. யார் அந்த கருப்பு ஆடுகள் என்னும் விவரமாவது தெரிந்ததா?
என்னமோ ஷங்கர் பட ரேஞ்சுக்கு கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தால் நிறைவேறி விடுமா?
முதலில் அவரவர் எந்த அளவுக்கு நல்லவர் என்பதை நினைந்து பிறகு மற்றவரை குறை காண முற்படுங்கள்..

கருப்பு பணத்தை கொணரச் சொல்லும் தீரருக்கே ஆயிரக்கணக்கான கோடிகள் இருக்கிறதாம்..
நம்மை கண்டால் எப்படி தெரிகிறது இவர்களுக்கு?
எதை செய்தாலும் நம்பி விடுவார்கள் என்று முடிவு கட்டி விட்டார்களோ?
நடப்பவை எல்லாம்  பார்த்தால்…
நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் அழுகிறேன்..
என்னும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது,
ஏதோ அரசே இவர்களை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி பிறகு கலைப்பதாகவும் தோன்றுகிறது. ஆனால் உடல் நிலை மோசமாகும் வரையில் தொடர்கையில் நம்பலாம் என்ற உணர்வு மற்ற மாநிலத்தவருக்கு வேண்டுமானால் வரலாம்..
நாம் எத்தனை உண்ணாவிரதங்களை இது போன்று முன்னரே பார்த்திருக்கிறோம் அதனால் எளிதில் நம்ப முடியவில்லை..

ஆனாலும் நம்மால் எல்லாம் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தாலே உடல் நம்மை “சாப்பிட்டு தொலையேண்டா”என்று திட்டி தீர்க்கும்.
இவர்களை உடல் திட்டாதோ?
(அடேய் முட்டாள் அவர்கள் பெரிய மனிதர்கள் அவர்களுக்கு பசிக்காதுடா என்று யாரோ சொல்வது போலிருக்கிறது) 

சரி சொல்ல வந்ததை விட்டு விட்டேனே,
அந்த நல்லவர் விஷயம்…
எங்கே உங்களை பார்த்து நீங்களே கேளுங்கள்
“நான் நல்லவனா?”
இதற்கு என் பதில் நீங்கள் கூறும் அதே பதில் தான்
“நிச்சயமா இல்லை”

நாம் ஒவ்வொருவரும் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்,பெறும் பணக்காரர்கள் மோசடி செய்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் திருந்த மாட்டேன் என்கிறோம் பிறகு எப்பிடி அவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

இறுதியாக என் செய்வேன்? என்று இந்த கட்டுரையை வழக்கம் போல முடிக்காமல் முதல் முறையாக வேறு விதமாக முடிக்கலாம் என்று இருக்கிறேன்..

நீ விரும்பும் மாற்றங்கள் யாவும் உன்னிலிருந்தே தொடங்கட்டும்…

இதை முன்னரே யாரேனும் சொல்லி இருந்தால் யாரென மறுமொழி இடவும் 

பகிர்ந்து
முந்தைய செய்திசச்சினுக்கும் மச்சம்…!
அடுத்த செய்திதமிழ்நாட்டு ராம்தேவும் வெள்ளை காக்காவும்…!
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.