நானும் நகரமும்

2
18

சும்மா இருக்க முடியாமல் நான் கிறுக்கிய வார்த்தைகள். வளரும் வசதிகளால் மறையும் இன்பங்களாய் என்னில் தோன்றியவை..———————– நாகரீக மோகத்தால் நகரம் நோக்கி நகர்ந்த நான் நற்செல்வம் பல பெற்றும் எதையோ இழந்ததை உணர்ந்தேன்..!   பச்சைபசேலென்ற வயல்கள் வற்றாத ஓடைகள் ரீங்காரமிடும் குருவிகள் மனிதரை மதிக்க தெரிந்த மக்கள் மகிழ்வு தரும் திருவிழாக்கள் வெட்டவெளி விளையாட்டுகள் என என்னுள் கிராமத்து இன்பங்கள் நிழலாடின..!   ஓங்கிய கட்டிடங்கள் தூய்வற்ற தண்ணீர் கூண்டு பறவைகள் கூத்தாடும் இரவுகள் கணினியே கதியாய் மக்கள் வீடியோ விளையாட்டுகள் என எதையுமே ஏற்கவில்லை என்னின் மனம்..!   துன்பத்திற்கு விலையாய் கொடுத்த இன்பங்களை நினைந்து கிராமத்திற்கு திரும்பினேன். கவிதையாய் இருந்த என் கிராமம் கசங்கி கெட்டது கண்டு கதி கலங்கி விட்டேன்..!   எது வேண்டாமென எண்ணினேனோ அது அவசரகதியில் வளர்ந்து வருகிறது மனைகளாகும் வயல்கள் மறைந்து போன பறவைகள் தொலைபேசும் மக்கள் தொல்லைகாட்சி என மெல்ல நகராமாய் இல்லை நரகமாய் உருமாறி வருகிறது என் சொர்க்கம்..! ———————
பிழைகளிருப்பின் பின்னூட்டப்படுத்தவும்…. மனோவி
                 

பகிர்ந்து
முந்தைய செய்திஎந்திரன் – முதல் தகவல் அறிக்கை
அடுத்த செய்திஉலகக் கிண்ணம் வெல்லும் திண்ணம்..! (1)
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

2 கருத்துக்கள்

  1. மனைகளாகும் வயல்கள்
    மறைந்து போன பறவைகள்
    தொலைபேசும் மக்கள்
    தொல்லைகாட்சி என மெல்ல
    நகராமாய் இல்லை நரகமாய்
    உருமாறி வருகிறது என் சொர்க்கம்..!

    மௌனமான வரிகளால் நிஜத்தை
    நிரூபிக்கின்றது தங்கள் கவிதை
    வரிகள் அருமை!..வாழ்த்துக்கள்….

    பதிலளிக்க
  2. மனைகளாகும் வயல்கள்
    மறைந்து போன பறவைகள்
    தொலைபேசும் மக்கள்
    தொல்லைகாட்சி என மெல்ல
    நகராமாய் இல்லை நரகமாய்
    உருமாறி வருகிறது என் சொர்க்கம்..!

    மௌனமான வரிகளால் நிஜத்தை
    நிரூபிக்கின்றது தங்கள் கவிதை
    வரிகள் அருமை!..வாழ்த்துக்கள்….

    பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க