காமராசர் – கதை அல்ல நிஜம் – 2

0
703

பகுதி 2

ஒரு வகையில் 60 வயது கடந்தவர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். ஏன் என்றால் அவர்கள் எல்லாம் காமராசர் என்னும் மனிதம் நிரம்பிய மனிதரை முதலமைச்சராய் பெற்று இருந்தார்கள்.

இன்றைக்கு இருக்கும் என்னை போன்ற இளைஞர்கள் காமராசரை பற்றி படிக்கும், தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் எதோ கதை போல தான் உள்ளது. என்ன செய்வது சூப்பர்மேன்களும், சூப்பர்ஸ்டார்களும் நிறைந்த உலகில் சாதாரணமான மக்கள் சேவை புரிபவர் எவரும் இல்லையே.

இதை ஒரு தொடராக தொகுக்க இருக்கிறோம். தங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை இங்கே பிரசுரிக்க [email protected] என்ற மின்னஞ்சலில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

காமராசர் வாழ்க்கை சரித்தரம் அல்ல இது, அவரை பற்றி எங்களுக்கு கிடைத்த தகவல்களை தொகுத்து தர இருக்கிறோம்.

எச்சரிக்கை : தயவு செய்து காமராசரை யாரும் இப்போது உள்ள அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு தங்கள் மனதை புண்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடைய அன்பு மாறவில்லை.
காமராஜர் முதல்வராக இருந்தபோது, சென்னை, தாம்பரம் குடிசைவாசிகளுக்கும் பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியல் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.ந
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந் தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட் டுக்கு காமராஜர்  வந்ததைக் கண்டு ஆச்சர் யப்பட்டு “”என்ன காமராஜ் என்று கேட் டார்.
“”என்ன நீங்க இந்த வீட்டுல இருக் கீங்க? என்று ஆதங்கப்பட்டார் காம ராஜர்.
உடனே ஜீவா, “”நான் மட்டுமா? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத் தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலிகூட இல் லாததால் இருவரும் நின்றுகொண்டே பேசினார்கள். “”நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.””காமராஜ், நீ முதலமைச்சர். நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க, “அட… ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார்.
“”அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் என்று அனுப்பி வைத்தார்.
“கண்டிப்பாக வரணும் என்றார் காமராஜர். விழாவுக்கு அரை மணிக்குமேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.
“”என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, “நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் லேட். தப்பா நினைச்சுக்காதே… என்றார். உடனே கண்கலங்கி விட்டார் காமராஜர்.
இரு தலைவர்களையும் ஒன்றாகப் பார்த்த மக்கள் சந்தோஷமானார்கள். விழா நல்லபடியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டி யது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
“”ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போகமாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம் என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்றார்.
உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விடமாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, “வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்கு ன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையைவிட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவரு டைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.
காமராஜர்  ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தை களால் வடிக்க முடியாதது. நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்கு போன் பண்ணுங்கள்! என்பதுதான் எத்தகைய நட்பு!

உங்கள் கருத்தை தெரிவிக்க